Jan 2, 2013

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 1


சரவணமுத்துக்குமார் ஆகிய நான், பாலகிருஷ்ணன் என்கிற பாலா (நமது வெள்ளிங்கிரி மலை வீசிங் பார்ட்டி தான்), பாலகிருஷ்ணன் என்கிற கிரிஷ் (Tour Organizer. எங்கள் குழுவில் இரண்டு பாலகிருஷ்ணன், ஒரு பாலு..ஆகவே அடையாளத்திற்காக பெயர் சுருக்கம்), திருக்கழுக்குன்றம் சரவணன், NAT என்கிற நடராஜ், கிரிஷ் நண்பர்கள் அருண் மற்றும் ஹரி, கிரிஷ் உடைய அண்ணன் அருள்மணி, அவரது நண்பர் குமார், ரமேஷ், பாலு மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் என நாங்கள் மொத்தம் பதினாறு பேர்

ஏழு முனிகளுடன் எங்கள் குழுவினர்

எங்கள் முதல் திட்டம் 28-டிசம்பர்-2012 (வெள்ளி இரவு) புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி மலை சென்று தரிசித்து விட்டு 31-டிசம்பர்-2012 (திங்கள் காலை) வருவதாக திட்டம். இரயில் பயணச்சீட்டு உறுதியாகாததால் வேனில் செல்லலாம் என முடிவெடுத்த போது சிலர் வேனில் வர விருப்பம் தெரிவிக்காததால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது. அடுத்த முறை சதுரகிரி செல்லலாம். இம்முறை பர்வதமலை செல்லலாம் என நமது கிரிஷ் (எ) பாலகிருஷ்ணன் முடிவெடுக்க நாமும் குஷியாக தயாரானோம்.
இம்முறை வெள்ளிங்கிரி மலை வந்த கார்த்திக், சுவாமி, ராம்ஜி சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த முறை வரவில்லை. அதற்கு பதிலாக வேறு சில நண்பர்கள் இணைந்து கொண்டார்கள்.
28-டிசம்பர்-2012 நல்ல வெள்ளிக்கிழமை இரவு 10:30 க்கு அதிசயமாக வேன் டிரைவர் சரியான நேரத்திற்கு வந்தாலும் அருணும், ஹரியும் வர லேட் ஆனதால் இரவு 11:30 அளவில் எங்கள் CSC-PKT, அண்ணா சாலை அலுவலகத்தில் இருந்து என்னுடன் கிரிஷ், NAT, சரவணன், அருண் மற்றும் ஹரி புறப்பட்டோம். வழியில் அருள்மணி அண்ணன், குமார் சார் திருமங்களத்திலும், பாலா MMM Hospital (கலெக்டர்  நகர்  பஸ் ஸ்டாப் ) விலும், ரமேஷ், பாலு மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் கரையாஞ்சாவடியிலும் (இவர்கள் வீடு கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. போன வழியிலேயே இரண்டு மூன்று முறை போனோம்) ஏறிக்கொள்ள எங்கள் பயணம் ஆரம்பமானது. சென்னையில் இருந்து கிளம்பி பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி வழியாக போளூர் சென்று செங்கம் வழியில் தென்மாதிமங்கலம் என்ற கிராமத்தின் எல்லைக்குள் பர்வதமலை அமைந்திருக்கிறது. பர்வதமலைக்கு தென்மாதிமங்கலம், கடலாடி ஆகிய இரண்டு ஊர்களிலும் இருந்து செல்லலாம். ஆரணியில் தேநீர் அருந்திவிட்டு நாங்கள் தென்மாதிமங்கலம் அடிவாரம் செல்லும்போது சுமார் அதிகாலை 4:00 மணி. பிறகு அங்கிருந்த கட்டண கழிவறையில் காலை கடன் முடித்து குளித்தோம்.வேனில் தேவையில்லாத துணிமணிகளை வைத்து விட்டு மலையேற புறப்பட்டோம். (Over Weight உடம்புக்கு (மலையேற) ஆகாது)



பயணம் தொடரும்....!

1 comment:

Karthickraj said...

Nice start....But i missed this time... :(