இனி ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் மானிய விலையில் கிடைக்கும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் குடும்பத் தலைவிகள். ஆறு கேஸ் சிலிண்டருக்கு மேல் தேவைப்படுமெனில், ஒரு கேஸ் சிலிண்டர் 900 ரூபாய் தந்துதான் வாங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் எப்படி போதும்; குறைந்தது பத்து கேஸ் சிலிண்டராவது வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்க எழுந்துள்ளது. சிலிண்டர்களின் எண்ணிக்கையை எட்டாக உயர்த்தலாமா அல்லது ஆறு சிலிண்டர் என்கிற அறிவிப்பையே வாபஸ் வாங்கிவிடலாமா என மத்திய அரசு யோசித்து வருவது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துவது எப்படி..? மாறிவிட்ட கலாசார சூழலில் இனி விறகு அடுப்புக்கு மாறுவது சாத்தியமே இல்லை என்கிறபோது, சமையல் எரிவாயுக்கு வேறு என்னதான் மாற்று என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.
மின்சார அடுப்பு!
எலெக்ட்ரிக் குக்கர்!
மைக்ரோவேவ் அவன்!
மாற்று வழிகளைப் பற்றி யோசிப்பது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளை பார்ப்போம். காரணம், சில எளிமையான நடைமுறைகளை பயன்படுத்தினாலே அரசு தரும் ஆறு சிலிண்டர்களை வைத்து, ஆண்டு முழுவதையும் ஓட்டிவிடலாம் என்கிறார்கள் ஆயில் நிறுவன அதிகாரிகள்.
அவர்கள் தரும் டிப்ஸ்கள் இதோ உங்களுக்கு:
சமையலுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் தயார் செய்து வைத்துக்கொண்டு அடுப்பை ஆன் செய்வது அவசியம்.
அடிக்கடி ஆஃப், ஆன் செய்வதால் அதிக கேஸ் செலவாகும். எனவே, அதை தவிர்ப்பது நல்லது.அகலமான பாத்திரத்தை வைத்து சமைத்தால் எரிபொருள் வீணாகாது.
தண்ணீரை கொதிக்க வைத்து சாதம் வடிக்காமல், குக்கரில் சமைப்பது ஒரு வழி. அதோடு ஒரே குக்கரில் காய்கறி, பருப்பு, அரிசி என தனிதனிப் பாத்திரத்தில் வைத்து சமைக்கலாம். கேஸ் அதிகமாக மிச்சமாகும்.
வெந்நீர் வைப்பதற்கு கேஸ் அடுப்பை பயன்படுத்தக்கூடாது. வெந்நீர் தயாரிக்க என எலெக்ட்ரிக் கொதிப்பான்கள் உள்ளன. அதையே வாங்கி பயன்படுத்தலாம்.
டீ, காபி அடிக்கடி போடுவதற்குப் பதில், மொத்தமாகப் போட்டு ஃபிளாஸ்கில் வைத்து குடிக்கலாம்.
ஃபிரிட்ஜில் வைத்திருந்த பால் மற்றும் பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து அறை வெப்ப நிலைக்கு வந்தபிறகு சூடுபடுத்தலாம்.